Friday 23 November 2012

ஈடில்லா இயற்கை உணவு!


NATURE FOOD IS UNEQUAL : ஈடில்லா இயற்கை உணவு!


     விடிந்தும், விடியாத அந்த அதிகாலை வேளையிலே ஒரு சின்னஞ்சிறிய கடைமுன் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்டத்திற்கு காரணம் அங்கு வழங்கப்படும் இயற்கை உணவுகள்தான்.

Thursday 22 November 2012

மினி ரெசிபி! - வாழைக்காய் குணுக்கு!



தேவையானப் பொருட்கள்:
வேக வைத்து மசித்த வாழைக்காய் - 2 கப்

ஷாம்பூவில் தண்ணீர் கலந்து பயன்படுத்துவது நல்லது



வெளியில் போகிறவர்களுக்கு கோடை காலத்தில், கூந்தல், வைக்கோலைப் போல் உலர்ந்து விடும். எவ்வளவுதான் எண்ணெய் தடவினாலும் போதாது. இப்படி இருந்தால், வாரத்திற்கு ஒரு தடவை காய்ச்சிய எண்ணெயை, தலையில் நன்றாகத் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊறிய பின், தலைக்கு குளிக்கவும்.

ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டி வேர், ரோஜா இதழ்கள், சந்தனப் பொடி ஆகியவை தலா, 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும்.

இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைத்தால், சூரிய கதிர்கள் பட்டு, எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடி கட்டவும். குளிக்கும் முன் இதை தலையில் தேய்த்து வந்தால், முடி உதிர்தல், நரைமுடி குறையும். செம்பட்டை முடி கருமையாகும்; பொடுகு நீங்கும்.

தினமும் தலைக்குக் கொஞ்சம் எண்ணெய் தடவி வர வேண்டும். அது, தேங்காய் எண்ணெயாக இருந்தால் நல்லது. எண்ணெய் தடவும் போது, விரல்களின் நுனியால் தலையில் அழுத்திப் பிடித்து விட்டுத் தேய்க்க வேண்டும். அப்படிச் செய்தால், கூந்தல், எண்ணெய் பசையுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

வெந்தயத்தை விழுதாக அரைத்து, தலையில் தடவி ஊறவிட்டு, பின்னர் எலுமிச்சை சாறு கலந்த நீரில் குளிக்கவும். இது, குளிர்ச்சியை ஏற்படுத்தும். செம்பருத்தி பூக்களை பசை போல அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை தலையில் தடவி பின்னர் அலசவும்.
சாதம் வடித்த நீருடன் சீகைக்காய் கலந்து. அதைக் கொண்டு முடியை தேய்த்து விட்டால், முடி பளபளக்கும்.
பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ, 50 கிராம் வாங்கி, அதை, 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். 
இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாக தேய்த்து, அரை மணி நேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள் வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ மூன்று வாரங்கள் குளித்தால், பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.


வெந்தயம், வால் மிளகு, சீரகம் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வர, இளநரை மறையும். கூந்தலுக்கு எப்போதும் எண்ணெய் பசையும், நீர்ச் சத்தும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ஹென்னா பயன்படுத்தி, நரை முடி தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம். ஹென்னா பயன்படுத்தும் போது, முறையான பயிற்சி வேண்டும். ஷாம்பூ அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தும் போது, ஒரு கோப்பை தண்ணீரில் ஷாம்பூவைக் கலந்து, பின்பு பயன்படுத்த வேண்டும்.

அழகுக் கலையில் செய்யக் கூடாதவை



தினமும் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்காதீர்கள். தலையின் இயற்கையான எண்ணெய் பசையை போக்கி விடும். வேலை காரணமாக தினமும் தலைக்குக் குளிக்க நேர்ந்தால், குழந்தைகளுக்கான ஷாம்பூ அல்லது மிதமான ஷாம்பூ பயன்படுத்தவும். எலுமிச்சம் பழத்தை பிழிந்து, ஜூஸ் எடுத்து, முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள் என்று சில அழகுக் குறிப்புகளில் சொல்லப்படுகிறது. ஆனால், எலுமிச்சம் பழத்தோல் அல்லது ஜூசை முகத்தில் அப்படியே தடவக் கூடாது; தோல் அலர்ஜியாகி விடும். பால் அல்லது பேஸ் பேக்குடன் கலந்து தான் உபயோகிக்க வேண்டும். பரு இருப்பவர்கள் முகத்தை மசாஜ் செய்யக் கூடாது; பரு காய்ந்து விட்டதா என்று கிள்ளிப் பார்க்கவும் கூடாது. எண்ணெய் பசை தோலுள்ளவர்கள், முகத்தை சுத்தப்படுத்த சோப்புக்கு பதில் தயிர் உபயோகிக்க கூடாது. மோர் அல்லது பால், எலுமிச்சை சாறு அல்லது பேஸ் வாஷ் கொண்டே முகத்தை சுத்தப்படுத்த வேண்டும்.

இவர்கள் முகத்துக்கு உபயோகிக்கும் பவுண்டேஷனை நீண்ட நேரம் பூசிக் கொண்டிருக்கக் கூடாது. பருக்கள் மற்றும் கரும்புள்ளி வந்து விடும். தினமும் தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளிக்காதீர்கள். தலையின் இயற்கையான எண்ணெய் பசையை போக்கி விடும். வேலை காரணமாக தினமும் தலைக்கு குளிக்க நேர்ந்தால், குழந்தைகளுக்கான ஷாம்பூ அல்லது மிதமான ஷாம்பூ பயன்படுத்தவும். முகத்தின் மீது நேரடியாக ஐஸ் கட்டி வைக்கவே கூடாது. அப்படி செய்தால், மிக மெல்லிய மேல்புறம் பாதிக்கப்படும். ஐஸ் கட்டியை பஞ்சு அல்லது துணிக்குள் வைத்து, முகத்தில் ஒற்றி எடுக்கலாம். அதேபோல், அதிக சூடான வெந்நீரிலும் முகம் கழுவக் கூடாது.

புருவத்துக்கு மையிடும் ஐ-புரோ பென்சிலை வைத்து கண்ணுக்குள் மையிடக் கூடாது. வறண்ட தோல் கொண்டவர்கள், வெள்ளரி துருவல் அல்லது ஜூசை அப்படியே முகத்தில் பூசக் கூடாது; பேஸ் பேக் எதனுடனாவது கலந்துதான் பூச வேண்டும். இவர்கள், அப்படியே உபயோகிக்காமல் புதினா விழுது, முல்தானி மட்டியுடன் கலந்து உபயோகிக்கலாம். டூவீலரில் செல்லும் போது முடியை அப்படியே பறக்க விடக் கூடாது. அழுக்கு சேர்ந்து முடி கொட்ட ஆரம்பித்து விடும். காட்டன் துணியால் தலையை சுற்றி கட்டிக் கொள்ளலாம்.

தலைமுடி ஈரமாக இருக்கும் போது வாராதீர்கள்; முடி உடைந்து விடும். முகம் கழுவியபின், டவலால் முகத்தை இழுத்துத் துடைக்காதீர்கள்; ஒற்றி எடுப்பதே உத்தமம். இரவில் உபயோகிக்கும் நைட் கிரீமும், மாய்ச்சுரைசரும் கூட கண்ணைச் சுற்றி பூசக் கூடாது. இந்தப் பகுதியில் எண்ணெய் சுரப்பிகளுக்கான துளைகள் கிடையாது. அதனால், கண்ணைச் சுற்றிலும் உப்பிப் போகும் வாய்ப்பு இருக்கிறது. கொதிக்க, கொதிக்க வெந்நீரில் குளிக்கக் கூடாது. உடலில் அத்தனை வியர்வை துளைகளும் திறந்து கொண்டு விடும். நாள் முழுக்க வியர்வை கொட்டும் அழுக்குகள் சுலபமாக அந்த துவாரங்களில் தங்கி அடைத்துக் கொண்டு விடும். முகத்தில் கரும்புள்ளிகளும் வரும், வெந்நீரில் குளித்தால், கடைசியாக உடல் முழுக்க படும்படி இரண்டு குவளை பச்சைத் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அக்குளில் பவுடர் போடக் கூடாது. முக்கியமான வியர்வை சுரப்பிகள் அங்கே இருக்கின்றன. பவுடர் இந்த வியர்வைத் துளைகளை மூடி விடுவதால், வியர்வை வெளிவர முடியாமல், துர்நாற்றம் வீசும். எண்ணெய் பசை தோலுள்ளவர்கள் ஐஸ்கிரீம், எண்ணெய், நெய் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அழகுக்கு முக்கிய எதிரி மலச்சிக்கல்; இது, தோலின் பொலிவை பாதிக்கும். வாய் நாற்றம் ஏற்படும். தினசரி ஏதாவது ஒரு கீரை, பச்சை காய்கறி, பழங்கள் சாப்பிட வேண்டும்.
- ஐடியா அம்புஜம்

நரைமுடி மறைய என்ன செய்யலாம்?



கறிவேப்பிலையை அரைத்து, சாறு எடுத்து, அந்தச் சாறு அளவிற்கு, தேங்காய் எண்ணெயை ஒன்றாகக் கலந்து, காய்ச்சி, வெண்ணெய் உருகுவது போல் வந்ததும், வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இதை தலைக்கு தேய்த்து வந்தால், நரைமுடி மறையும்.
- அலமு பாட்டி. 

நன்றி : தினமலர்

தலைமுடி பட்டுப் போல இருக்க.



பசும் தயிரை புளிக்க வைத்து, காலையில் தலை முழுவதும் தேய்த்து, குளிர்ந்த நீரில் குளித்தால், தலைமுடி பட்டுப்போல மென்மையாக இருக்கும்.
* தலை முடிக்கு, சுத்தமான தேங்காய் எண்ணெயே சிறந்தது.
* சீயக்காய்த்தூளுடன், காயவைத்த எலுமிச்சைப் பழ மூடிகளையும் சேர்த்து அரைத்து உபயோகப்படுத்தினால், கூந்தல் பட்டுப் போல இருக்கும். சருமமும் மிருதுவாக இருக்கும்.

பொடுகு தொல்லை நீங்க...

சிகைக்காயை அரைக்கும் போது, அத்துடன் வேப்பிலை, வெள்ளை மிளகு, வசம்பு போன்றவற்றை சேர்த்து அரைத்து, பூசி குளித்தால், பொடுகு தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். முடியும் கருகருன்னு, அடர்த்தியாக வளரும்.